எதற்க்கும் அதிக நேரம் காத்திருந்ததாக
அவ்வளவாக ஞாபகம் இல்லை
***
இறுதியாண்டு புகுமுன்னே
வளாகம் தேடி வந்தது வேலை
வாசலில் காத்திருந்து
அழைத்து செல்ல
அலுவலக ஊர்தி
***
வீடு தேடி வந்தது
வங்கிக் கடன்
பதிவு செல்ல
சார் பதிவாளர் அலுவலகம்
போகையிலும்
காத்திராமல்
இடைத்தரகர் உபயத்தில்
துரித சேவை
***
வலைப்பின்னலில்
பயணப்பதிவு
கணிப்பொறியில்
கருத்துப்பதிவு
***
எதற்க்கும் அதிக நேரம் காத்திருந்ததாக
அவ்வளவாக ஞாபகம் இல்லை
***
இப்போது
வீழ்ந்த
பொருளாதாரம் மீள்வதற்க்கும்
இழந்த
வேலை கிடைப்பதற்க்கும்
நீண்ட நாட்களாய்
காத்திருக்கிறேன்...
Tuesday, June 2, 2009
Friday, May 29, 2009
அமங்கலம்
தங்கைக்கு கல்யாணம்
எல்லா பொறுப்பும்
இளம் கைம்பெண் அக்காவிற்கே
"காய்கறி வாங்க பணம் வேண்டும்"
"காசி யாத்திரை குடை காணும்"
என எல்லாவற்றிக்கும்
கூப்பிடு மங்களத்தை
என்று கூவி அழைத்தவர்கள்
ஏனோ மறந்து போனார்கள்
தாலி கட்டும் நேரத்தில்
மேடைக்கு அழைக்க
எல்லா பொறுப்பும்
இளம் கைம்பெண் அக்காவிற்கே
"காய்கறி வாங்க பணம் வேண்டும்"
"காசி யாத்திரை குடை காணும்"
என எல்லாவற்றிக்கும்
கூப்பிடு மங்களத்தை
என்று கூவி அழைத்தவர்கள்
ஏனோ மறந்து போனார்கள்
தாலி கட்டும் நேரத்தில்
மேடைக்கு அழைக்க
பண்டிகைக்காலம்
இருட்டு விலகுமுன்னே
எழுந்து கோலமிட்டு
ஈரம் போகாத தலையோடு
சமையல் செய்து
இடை இடையே
அடுத்த ஜென்மத்திற்காக
பூசை செய்யும்
கணவனின் குரலுக்கு
எடுபிடி வேலை செய்து
இடம் நின்று
அக்னி வலம் வந்து
வந்தாரை உபசரித்து
உணவளித்து
எச்சில் இலையில்
மிச்சம் தின்று
இலை எடுத்து
தரை துடைத்து
அலுப்பாய் தரை சாய்கையில்
அடுத்த வேலை(ளை)க்காய்
அழைப்பு வரும்
உண்ட களைப்பு
தொண்டருக்கும் உண்டாம்
பெண்களுக்கு??
எழுந்து கோலமிட்டு
ஈரம் போகாத தலையோடு
சமையல் செய்து
இடை இடையே
அடுத்த ஜென்மத்திற்காக
பூசை செய்யும்
கணவனின் குரலுக்கு
எடுபிடி வேலை செய்து
இடம் நின்று
அக்னி வலம் வந்து
வந்தாரை உபசரித்து
உணவளித்து
எச்சில் இலையில்
மிச்சம் தின்று
இலை எடுத்து
தரை துடைத்து
அலுப்பாய் தரை சாய்கையில்
அடுத்த வேலை(ளை)க்காய்
அழைப்பு வரும்
உண்ட களைப்பு
தொண்டருக்கும் உண்டாம்
பெண்களுக்கு??
பயணம்
எப்போதும்
பதிவு செய்த ரயில் பயணம்
இல்லாமல் போனால்
சொகுசு பேருந்து
நிலையம் செல்ல
வாடகை ஊர்தி
என என் மகன்
சுகமாய் வாழ்வதாய்
இறுமாந்திருந்த நான்
இரு கையில்
சுமை ஏந்தி
தோளில்
மகன் சுமந்து
பேருந்து
பிடிக்க ஓடிக்கொண்டிருநத
ஏழை தந்தை முன்
தலை குனிந்து போனேன்
பதிவு செய்த ரயில் பயணம்
இல்லாமல் போனால்
சொகுசு பேருந்து
நிலையம் செல்ல
வாடகை ஊர்தி
என என் மகன்
சுகமாய் வாழ்வதாய்
இறுமாந்திருந்த நான்
இரு கையில்
சுமை ஏந்தி
தோளில்
மகன் சுமந்து
பேருந்து
பிடிக்க ஓடிக்கொண்டிருநத
ஏழை தந்தை முன்
தலை குனிந்து போனேன்
Subscribe to:
Posts (Atom)