இருட்டு விலகுமுன்னே
எழுந்து கோலமிட்டு
ஈரம் போகாத தலையோடு
சமையல் செய்து
இடை இடையே
அடுத்த ஜென்மத்திற்காக
பூசை செய்யும்
கணவனின் குரலுக்கு
எடுபிடி வேலை செய்து
இடம் நின்று
அக்னி வலம் வந்து
வந்தாரை உபசரித்து
உணவளித்து
எச்சில் இலையில்
மிச்சம் தின்று
இலை எடுத்து
தரை துடைத்து
அலுப்பாய் தரை சாய்கையில்
அடுத்த வேலை(ளை)க்காய்
அழைப்பு வரும்
உண்ட களைப்பு
தொண்டருக்கும் உண்டாம்
பெண்களுக்கு??
Subscribe to:
Post Comments (Atom)
It's really nice. congrats. I need ur permission to read out ur poem at our monthly literary meet at Puduvai on 02.06.09.
ReplyDelete