எப்போதும்
பதிவு செய்த ரயில் பயணம்
இல்லாமல் போனால்
சொகுசு பேருந்து
நிலையம் செல்ல
வாடகை ஊர்தி
என என் மகன்
சுகமாய் வாழ்வதாய்
இறுமாந்திருந்த நான்
இரு கையில்
சுமை ஏந்தி
தோளில்
மகன் சுமந்து
பேருந்து
பிடிக்க ஓடிக்கொண்டிருநத
ஏழை தந்தை முன்
தலை குனிந்து போனேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment